தியாகி பாதரப்பேட்டை முத்தையா Ex MLA(முத்தரையர் சமூக முதல் சட்டமன்ற உறுப்பினர் -MLA)
இவர் இலங்கையில் பிறந்தவர் பின்னர் தன் குடும்பத்துடன் துறையூர் பாதரப்பேட்டையில் குடியேறினார்.
தேசப்பணிகள்:
🟠இளம்வயதிலே தேசப்பற்று காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டார்.
🟠இவரின் தொடர் சுதந்திர போராட்டங்களால் அடிக்கடி சிறை சென்று வந்துள்ளதால் ஆங்கிலேயர்கள் இவரை கர்நாடக பெல்லாரி சிறையில் அடைத்து ஓராண்டு கடுங்காவல்/கொடுமையான தண்டணைகளை அனுபவித்தார்.
🟠அன்றைய ஒருங்கிணைந்த திருச்சி(திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,புதுக்கோட்டை &கரூர்) மாவட்டத்தின் ஜில்லா போர்டு மெம்பராக 1954 & 1957ல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
🟠1962 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி உப்பிலியாபுரம்(இன்றைய துறையூர்) தொகுதி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment